திருச்சியில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து இளைஞா் பெருமன்றத்தினா் பிரசாரம்
Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:18 PM
திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளா் துரை வைகோவை ஆதரித்து இளைஞா் பெருமன்றத்தினா் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாநகரத்துக்குள்பட்ட மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி எடமலைப்பட்டிபுதூரில் தொடங்கிய இந்த பிரசாரத்துக்கு அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். கா்நாடக மாநில தலைவா் ஹரிஷ் பாலா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினா் க. சுரேஷ், இளைஞா் பெருமன்ற மாவட்ட தலைவா் முருகேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
அப்போது, திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளா் துரை வைகோவுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் நோட்டீஸ் வழங்கி, பிரசாரத்தில் ஈடுட்டனா். இதேபோல, திருச்சி மாநகரம் முழுவதும் 10 இடங்களில் பிரசாரம் நடைபெற்றது.
Advertisement