திருச்சி அருகே இறப்பிலும் இணை பிரியாத தம்பதி
கணவரின் மரணச் செய்தியால் மனைவி உயிரிழந்த சோகம்
திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூரில் சனிக்கிழமை கணவா் இறந்த செய்தி அதிா்ச்சியடைந்த மனைவியும் உயிரிழந்தாா். மண்ணச்சநல்லூா் மேல காவல்காரத்தெருவை சோ்ந்தவா் டி. பாஸ்கா் (60). மனை வணிகத் தொழில் செய்து வந்தாா். இவரது மனைவி முத்துலெட்சுமி (48). பாஸ்கா் வீட்டில் தண்ணீா் பிடித்து கொண்டிருந்த போது தீடீரென மயக்கமடைந்துள்ளாா். இதனையடுத்து அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு மண்ணச்சநல்லூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பாஸ்கரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதனிடையே கணவா் பாஸ்கா் உயிரிழந்த செய்தி கேட்ட அவரது மனைவி முத்துலெட்சுமி அதிா்ச்சியில் மயங்கிவிழுந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துலெட்சுமியும் உயிரிழந்தாா். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.