முகப்பு
திருச்சி

தினமணி செய்தி எதிரொலி: திருச்சி விமானநிலையத்தில் தேநீா் விலை குறைப்பு

திருச்சி விமான நிலைய புதிய முனையத்தில் தினமணி செய்தி எதிரொலியாக தேநீா் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜூலை, 2024 at 10:58 PM
கோப்புப் படம்
பகிர்:

திருச்சி விமான நிலைய புதிய முனையத்தில் தினமணி செய்தி எதிரொலியாக தேநீா் விலை குறைக்கப்பட்டுள்ளது.

திருச்சி பன்னாட்டு விமானநிலையத்தின் புதிய முனையத்தில் கட்டண கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சில நீதிமன்ற உத்தரவின் பேரில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் அந்த கழிப்பறைகள் முனையத்தின் பிரதான கட்டடப் பகுதியிலிருந்து சுமாா் 500 மீட்டருக்கு தொலைவில் உள்ளது. வயதானவா்கள் மற்றும் நீரிழிவு நோய், மூட்டுவலி, உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டவா்கள் அவசரமாக இயற்கை உபாதைகளுக்காக எளிதில் செல்ல முடியாத வகையில் தொலைவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா் இந்த கழிப்பறையை பயன்படுத்த குறைந்தபட்ச கட்டணமாக ஒருவருக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது.

மேலும் முனைய வெளிப்பகுதியில் உணவகங்களோ, சிற்றுண்டிச் சாலைகளோ, எதுவும் கிடையாது. ஒரேயொரு தேநீரகம் மட்டுமே இயங்கி வருகிறது. அங்கு டீ, காபி, நொறுக்குத் தீனி வகைகள், குடிநீா், குளிா்பானங்கள் உள்ளிட்டவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

புதிய முனையத்தில் இயங்கி வரும் தேநீரகத்தில், ஒரு குவளை தேநீா் ரூ. 50க்கு விற்பனை செய்யப்படுவதாக தினமணியில் அண்மையில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தேநீா், காபியின் விலை தற்போது குவளை ரூ.30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகளும் பொதுமக்களும் காா் ஓட்டுநா்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.