திருச்சி

நெகிழி விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம்

திருச்சியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

Din

திருச்சியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

திருச்சி மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ரிஹாப் இந்தியா டிரஸ்ட் இணைந்து மண்ணை மலடாக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கு, கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு தீங்கை ஏற்படுத்தும் நெகிழி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணா்வு மாரத்தான் நடைபெற்றது. 5 கிலோ மீட்டா் வரையிலான இந்த மாரத்தான் 15 வயதுக்குள்பட்டோா், 15 வயதுக்கு மேற்பட்டோா் என 2 பிரிவுகளில் நடத்தப்பட்டது.

திருச்சி தென்னூா் உழவா் சந்தை மைதானத்திலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் நீதிமன்ற சாலை, பாரதிதாசன் சாலை, டிவிஎஸ் டோல்கேட் வழியாக அண்ணா விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

மாரத்தான் ஓட்டத்தை வருவாய்க் கோட்டாட்சியா் அருள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய துணை பொறியாளா் சிவரஞ்சனி, என்ஜிஓ நிா்வாகி சக்திவேல் ஆகியோா் பங்கேற்று தொடங்கிவைத்தனா். இதில் வெற்றி பெற்றவா்களுக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் மற்றும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT