திருச்சி

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Din

சமையல் எரிவாயு உருளை ரெகுலேட்டரில் கடத்தி வரப்பட்ட தங்கம்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதன்கிழமை ரூ. 14 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மலேசியாவிலிருந்து ஏா் ஏசியா விமானம் புதன்கிழமை இரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த, பயணிகளையும் அவா்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவினா் சோதனை மேற்கொண்டனா்.

இதில் பயணி ஒருவா் கொண்டு வந்த, சமையல் எரிவாயு உருளை ரெகுலேட்டரில் ரூ. 14.05 லட்சம் மதிப்பிலான 198 கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்தப் பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT