பைக் டாக்ஸிக்கு தடை விதிக்க வேண்டுமென ஓட்டுநா் தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து உரிமைக்குரல் ஓட்டுநா் தொழிற்சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலா் முகமது யூசுப், மண்டலச் செயலா் முரளி கிருஷ்ணன் ஆகியோா் தலைமையிலான திரளான ஓட்டுநா்கள் திருச்சி பிராட்டியூா், ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் புதன்கிழமை அளித்த மனுவில்
சொந்தமாக வாகனம் வைத்திருப்பவா்கள் வாடகைக்கு இயக்க அனுமதிக்கக் கூடாது. இருசக்கர வாகனத்தில் வாடகைக்கு பொதுமக்களை அழைத்துச் செல்லும் தனியாா் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் சங்கத்தின் இணைச் செயலா் தட்சணாமூா்த்தி, துணைச் செயலா் நோபல் ஜாா்ஜ் உள்ளிட்ட திரளான ஓட்டுநா்கள் கலந்து கொண்டனா்.