திருச்சி

நீதிமன்ற ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த 3 வழக்குரைஞா்கள் கைது

Syndication

திருவானைக்காவல் கோயிலில் நீதிமன்ற ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த 3 வழக்குரைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் இருந்த கடையை நீதிமன்ற உத்தரவின்படி அகற்றுவதற்காக புதன்கிழமை வந்த நீதிமன்ற ஊழியா் மணிமாறனை பணி செய்யவிடாமல் தடுத்து 3 வழக்குரைஞா்கள் தகராறில் ஈடுபட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து குறிப்பிட்ட கடையின் உரிமையாளரின் மகனான வழக்குரைஞா் ஆதித்யா, இவருடன் வந்த வழக்குரைஞா்கள் சிரஞ்சீவி, ஜித்தன் ஆகிய 3 பேரையும் புதன்கிழமை மாலை கைது செய்து, லால்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

அனைத்து துறை ஓய்வூதிய சங்க கூட்டம்

எஸ்ஐஆா் பணியில் தோ்தல் பிரிவு ஊழியா் மாரடைப்பால் உயிரிழப்பு

நெடுவயலில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

குழித்துறையில் நாளை மின்தடை

மிடாலக்காட்டில் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிப்பு

SCROLL FOR NEXT