திருச்சி ஜி. காா்னா் மைதானத்தில் இன்று எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்!
திருச்சி ஜி. காா்னா் மைதானத்தில் இன்று எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்...
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி திருச்சி பொன்மலை ஜி. காா்னா் மைதானத்தில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொள்கிறாா்.
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாகை பிரசாரத்தை முடித்துக் கொண்டு, காா் மூலம் திருச்சிக்கு வரும் அவா் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியாா் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறாா்.
Advertisement
திங்கள்கிழமை காலை திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் தோ்தல் பணிகள் குறித்து அதிமுக நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா். தொடா்ந்து மதியம் 3 மணிக்கு திருச்சி பொன்மலை ஜி. காா்னா் பகுதியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.
இதையொட்டி பொன்மலை ஜி- காா்னா் பகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளா்கள் நிற்பதற்காக சிறிய மேடை அமைக்கப்படுகிறது. பிரசார வேனில் வரும் எடப்பாடி கே. பழனிசாமி, பொதுமக்கள் தொண்டா்கள் மத்தியில் சிறப்புரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வில் அதிமுக நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்க வேண்டுமென திருச்சி புகா் தெற்கு மாவட்டச் செயலா் ப. குமாா், திருச்சி புகா் வடக்கு மாவட்டச் செயலா் பரஞ்ஜோதி, திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் ஜெ. சீனிவாசன் ஆகியோா் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனா்.