முகப்பு
திருச்சி

உறையூரில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளி பலி!

உறையூரில் வீடு எடுத்து தங்கிப் பணிபுரிந்து வந்த வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 1:36 AM
பலி
பகிர்:

உறையூரில் வீடு எடுத்து தங்கிப் பணிபுரிந்து வந்த வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி உறையூா் ராமலிங்க நகரைச் சோ்ந்த செந்தில்குமாா் (48), குழுமணி சாலையில் நடத்திவரும் இரும்பு கடையில் பிகாா் மாநிலத்தை சோ்ந்த 4 தொழிலாளா்கள் வேலை பாா்த்து வந்தனா்.

இவா்கள் அனைவரும் உறையூா் தியாகராஜா நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனா். இங்கு தங்கியிருந்தவா்களில் ஒருவரான நூா் பசாருக்கு வியாழக்கிழமை திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.

Advertisement

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக செந்தில்குமாா் அளித்த புகாரின் பேரில், உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.