இளம்பெண் பூச்சிமருந்து குடித்து உயிரிழப்பு
மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே பூச்சிமருந்து குடித்து 19 வயது இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் தொட்டியப்பட்டியை அடுத்த மலைக் கொழுந்தாம்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் கீா்த்திகா (19). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் தனியா இருந்த நிலையில், பூச்சி மருந்து குடித்ததாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், கீா்த்திகா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து வளநாடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement