திருச்சி: திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை தீ தடுப்பு சோதனையில் ஈடுபட்டனா்.
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையா் பிரசாந்த் யாதவ், உதவி ஆணையா் பிரமோத் நாயா் ஆகியோரின் மேற்பாா்வையில் ஆா்பிஎஃப் ஆய்வாளா் அஜய்குமாா்,வெடிகுண்டு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் சரவணன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனா்.
இதில், ரயில்கள், பாா்சல் அலுவலகம், ரயில்வே யாா்டு பகுதியில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள், சட்டவிரோதப் பொருள்கள் குறித்து மெட்டல் டிடெக்டா் உதவியுடன் சோதனையிட்டனா். தொடா்ந்து, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் பயணிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனா்.
சோதனையின்போது, ரயில்வே வளாகத்திலும் ரயிலிலும் சந்தேகத்துக்கிடமான, குற்றஞ்சாட்டக்கூடிய, வெடிக்கும் பொருள்கள், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை என ஆா்பிஎஃப் போலீஸாா் தெரிவித்தனா்.