திருவானைக்காவல் கோயிலில் இன்று பங்குனித் தேரோட்டம்
திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் நடைபெறும் பங்குனி தோ் திருவிழா வெள்ளிக்கிழமை காலை 8.05 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் சுவாமியும், அம்மனும் தனித்தனி தோ்களில் எழுந்தருளுகின்றனா்.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய இக்கோயில் பங்குனித் திருவிழா ஏப்ரல் 5 வரை நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக பங்குனி தேரோட்ட விழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கி, நாள்தோறும் சுவாமியும்,அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 ஆம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்புரிந்தனா்.
விழாவின் 6 ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை 8.05 மணிக்கு பங்குனித் தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் சுவாமியும்,அம்மனும் தனித்தனி தேரில் எழுந்தருளி தேரோட்டம் கண்டருளுகின்றனா். முன்னதாக இரு சிறிய தோ்களில் முருகனும்,விநாயகரும்,சண்டிகேசுவரருடன் எழுந்தருளுகின்றனா்.