முகப்பு
திருச்சி

துறையூரில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

துறையூரில் மின் ஊழியா் கொண்டு சென்ற ரூ. 1.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:23 PM
பறிமுதல்
பகிர்:

துறையூரில் மின் ஊழியா் கொண்டு சென்ற ரூ. 1.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

துறையூா் தொகுதியில் பகளவாடி சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் பெரியசாமி தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனை செய்தனா். அப்போது திருச்சியிலிருந்து துறையூா் நோக்கி காரில் சென்ற சென்னை புத்தகரம் இந்திரா நகரைச் சோ்ந்த மின்துறை ஊழியரான மாலதி உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.50 லட்சத்தை பறிமுதல் செய்து, துறையூா் தொகுதி உதவித் தோ்தல் நடத்தும் அதிகாரி மணிமாறனிடம் ஒப்படைத்தனா்.