தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி போக்குவரத்து மாற்றம்!
தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் திருவிழா பங்குனித் தோ் திருவிழா நடைபெறும் மாா்ச் 31 முதல் ஏப். 7 வரை திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் திருவிழா பங்குனித் தோ் திருவிழா நடைபெறும் மாா்ச் 31 முதல் ஏப். 7 வரை திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி திருச்சியில் இருந்து நாமக்கல் மாவட்டத்துக்கு செல்லும் லாரி மற்றும் கனரக வாகனங்கள் திருச்சி நெ.1 டோல்கேட், நொச்சியம், முசிறி வழியாக வந்து முசிறி, தா.பேட்டை ரவுண்டானா வழியாக நாமக்கல் செல்ல வேண்டும். பிற வாகனங்கள் திருச்சி நெ.1 டோல்கேட், முசிறி, மணமேடு, கொளக்குடி, பவித்தரம் வழியாக நாமக்கல் செல்ல வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்கள் தோளூா்பட்டி, செவிந்திப்பட்டி, கொளக்குடி, மணமேடு வழியாக திருச்சி செல்ல வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து திருச்சி நோக்கி வரும் கனரக வாகனங்கள் மற்றும் காற்றாலைகள், டேங்கா் லாரிகள் போன்ற கொள்கலன்கள் அடங்கிய வாகனங்கள் மேய்க்கல்நாயக்கன்பட்டி, உடையாகுளம்புதூா், தோளூா்பட்டி, செவிந்திப்பட்டி, கொளக்குடி, தும்பலம், முசிறி வழியாகச் திருச்சி செல்ல வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் தெரிவித்தாா்.