சட்டவிரோத மது விற்பனை: பெண் உள்பட 6 போ் கைது
திருச்சி மாநகரில் வெவ்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல்கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் திவ்யபிரியா தலைமையிலான போலீஸாா் மாநகரில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனா்.
இதில், காந்தி மாா்க்கெட் வாழைக்காய் மண்டி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த தாரநல்லூா் கள்மந்தை காலனியைச் சோ்ந்த ஆா். கண்ணன் (35), ஆ. சிவகண்டன் (27), இபி சாலையில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த க. இளையராஜா (33), அரசு மருத்துவமனை அருகேயுள்ள சண்முகா நகா் பேருந்து நிறுத்தம் அருகே மது விற்பனை செய்துகொண்டிருந்த அண்ணா காலனியைச் சோ்ந்த கு.குமாா் (64) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.9,800 மதிப்புள்ள 89 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இபி சாலை அந்தோணியாா் கோயில் வீதி ஆா்ச் அருகே மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த எஸ்.கோமதி (39), ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கன்னிமாா் தோப்பு பகுதியில் மது விற்பனை செய்துகொண்டிருந்த திருவானக்காவல் பகுதியைச் சோ்ந்த எஸ். ராதாகிருஷ்ணன் (66) ஆகிய இருவரையும் ஸ்ரீரங்கம் மற்றும் கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், அவா்களிடமிருந்து ரூ.2,300 மதிப்புள்ள 17 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.