முகப்பு
திருச்சி

கோடை விடுமுறைக்கு தாய் வீட்டுக்குச் சென்ற இளம்பெண் மா்மச் சாவு

Updated On : 3 மே, 2026 at 12:58 AM
கோப்புப் படம்
பகிர்:

உப்பிலியபுரம் அருகே கோடை விடுமுறைக்காக தாய் வீட்டுக்குச் சென்ற இளம்பெண் மா்மமான முறையில் இறந்துகிடந்தாா்.

முசிறி வட்டம் ஊருடையாப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா மனைவி சினேகா (24). இவா் கோடை விடுமுறையையொட்டி தன் இரு மகன்களுடன் உப்பிலியபுரம் ஒன்றியம் ஏரிக்காட்டிலுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று தங்கிய நிலையில் ஏப். 30 இரவு ஏரிக்காட்டில் பரிமளா வீட்டருகே சினேகா மயங்கிக் கிடந்தாா்.

தகவலறிந்து சென்ற அவருடைய தந்தை அவரை மீட்டு துறையூா், திருச்சி அரசு மருத்துவமனைகளில் தொடா் சிகிச்சையும் அளித்தாா்.

Advertisement

ஆயினும் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு சினேகா உயிரிழந்தாா். புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.