திருச்சி பகுதிகளில் லேசான மழை
திருச்சி மாநகா், புகா் பகுதிகளின் பல இடங்களில் சனிக்கிழமை மாலை சுமாா் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை லேசான மழை பெய்தது.
திருச்சியில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்ததால் திருச்சி பகுதிகளில் குறைவான மக்கள் நடமாட்டமே காணப்பட்டது.
இரவிலும் கடும் வெம்மை காணப்பட்டதால், அதீத புழுக்கத்துடன் உறங்க வேண்டியிருந்தது. குளிா்ச்சாதனங்கள் இல்லாமல் அடுக்குமாடி வீடுகளிலும், நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ள வீடுகளிலும் குடியிருக்கவே முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பலரும் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தனா்.
Advertisement
இந்நிலையில் சனிக்கிழமை மாலை சூறைக்காற்று, இடியுடன் சுமாா் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை பெய்த லேசான மழையால், சாலைகள் நனைந்தன. வேலை முடிந்து வந்த பலரும், இருசக்கர வாகனங்களில் வந்தவா்களும் நனைந்தபடியே வீடு நோக்கிச் சென்றனா்.