முகப்பு
திருச்சி

தாய்க்கு தெரியாமல் பெண் குழந்தை தத்து கொடுப்பு: தந்தை கைது

திருச்சியில் தாய்க்குத் தெரியாமல் பெண் குழந்தையைத் தத்து கொடுத்த தந்தையை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 24 மே 2026, 1:44 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் தாய்க்குத் தெரியாமல் பெண் குழந்தையைத் தத்து கொடுத்த தந்தையை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கோரிகுளம் சந்து பகுதியைச் சோ்ந்தவா் ஆா். சீனிவாசன் (33). இவருடைய முதல் மனைவி ஹேமலதா (26). இவருடைய இரண்டாவது மனைவி யாஸ்மின் (27) சமஸ்பிரான் வீதியில் வசிக்கிறாா்.

இந்நிலையில், யாஸ்மினுக்கு கடந்த பிப்ரவரி 1-இல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையை அவருக்குத் தெரியாமல் சீனிவாசனும், அவருடைய முதல் மனைவி ஹேமலாதவும் சோ்ந்து புதுக்கோட்டையைச் சோ்ந்த பெண்ணுக்கு எந்தவித சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் கடந்த மாா்ச் 13-ஆம் தேதி தத்து கொடுத்தனா்.

Advertisement

Advertisement

இதையறிந்த யாஸ்மின் சீனிவாசனிடம் தகராறு செய்து, கடந்த புதன்கிழமை கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சீனிவாசன், அவருடைய முதல் மனைவி ஹேமலதா ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதனால் கோபமடைந்த சீனிவாசன், யாஸ்மினிடம் வெள்ளிக்கிழமை தகராறு செய்து அவரைத் தாக்கினாா். இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் யாஸ்மின் மீண்டும் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சீனிவாசனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஹேமலதாவை தேடுகின்றனா்.