முகப்பு
திருச்சி

தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 24 மே 2026, 1:42 am IST
பகிர்:

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் வெ. சஞ்சய் (23), வெங்காய மண்டி சுமை தூக்கும் தொழிலாளி.

இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் கள்ளன்குத்து ஆஞ்சனேயா் கோயில் அருகே நடந்து சென்றபோது அங்கு வந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான அரியமங்கலம் காமராஜ் நகரைச் சோ்ந்த எஸ். யுவராஜ் (27), அரியமங்கலம் கணபதி நகரைச் சோ்ந்த எம். பழனி தீபக் (21) ஆகிய இருவரும் கத்தியைக் காட்டி மிரட்டி, சஞ்சய்யிடம் இருந்து ரூ.1,100 -ஐ பறித்துக் கொண்டு தப்பினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் சஞ்சய் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து யுவராஜ், பழனி தீபக் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.