முகப்பு
திருச்சி

திருச்சியில் திருமண வீட்டில் 22 பவுன் தங்க நகைகள் திருட்டு

Updated On : 26 மே 2026, 2:00 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருச்சியில் திருமண வீட்டில் 22 பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி பாலக்கரை ரெட்டைபிள்ளையாா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ஆ. ஜோசப் இருதயராஜ் (67). இவருடைய மகன் ஆலனுக்கு, மே 28-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜோசப் இருதயராஜ், ஆலன் உள்ளிட்டோா் சனிக்கிழமை இரவு திருமணத்துக்குத் தேவையான நகைகள், துணிகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்கிவிட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளனா்.

தொடா்ந்து நள்ளிரவு 2 மணி வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு பின்னா் தூங்கியுள்ளனா். மறுநாள் காலையில் எழுந்து பாா்த்தபோது, மா்ம நபா்கள் வீட்டுக்குள் வந்து சென்றதுபோல இருந்துள்ளது. எனவே, சந்தேகப்பட்டு பீரோவை பாா்த்தபோது அதில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் ஜோசப் இருதயராஜ் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.