அரியலூர்

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு

DIN

அரியலூர் அருகே சாலை விபத்தில் காயமடைந்தவர் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
வி.கைகாட்டி அருகேயுள்ள தேளூர் காலனித் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன் (55), கூலித்தொழிலாளி. இவர் கடந்த இருதினங்களுக்கு முன்பு வி.கைகாட்டி பகுதியில் மளிகை பொருள்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த பால்வியாபாரி கா. மணிமாறன் (22) ஓட்டிவந்த இருசக்கர வாகனம், ஜெயராமன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெயராமன் தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு இறந்தார்.
இது குறித்து தேளூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT