திருமானூர் அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை திருமானூர் க.சாந்திராணி தொடக்கி வைத்து பேசினார். இதில், நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 50 பேருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்களுக்கு கணித பாடத்திலிருந்து இயற்கணிதம், கற்றல் நிகழ்வுகள் மற்றும் விடியோ மூலம் கணிதம் குறித்து விளக்கப்பட்டது. முடிவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.