அரியலூர் மாவட்டம் கூத்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை (நவம்பர் 16)நடைபெறுவதால், அரியலூர் மேற்கு பகுதி, பி.ஆர். நல்லூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி, காடூர் நமங்குணம், கீழப்பெரம்பலூர் மற்றும் துங்கபுரம் ஆகிய ஊர்களில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.