அரியலூர்

பெண்ணை காதலித்து திருமணம் செய்ய  மறுத்தவர் கைது

DIN

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே பெண்ணைக் காதலித்து திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவரை  மகளிர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள இரும்புலிகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சத்தியநாதன் மகன் அன்பு (19). இவர், திருச்சியில் உள்ள  ஒரு தனியார் கல்லூரியில்   படித்து வருகிறார். இவர் 19 வயதுள்ள கல்லூரி மாணவி ஒருவருடன் கடந்த 4  வருடங்களாக பழகி வந்துள்ளார்.
தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக அப்பெண் அளித்த புகாரின் பேரில் ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து அன்புவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT