அரியலூர்

வேனுக்கு அடியில் படுத்துறங்கிய அரசுப் பேருந்து ஓட்டுநர் சாவு

DIN

அரியலூரில், மதுபோதையில் மினிவேனுக்கு அடியில் படுத்துறங்கிய அரசுப் பேருந்து ஓட்டுநர், வேன் திடீரென இயக்கப்பட்டதால் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அரியலூர் கே.கே.நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் கேசன் மகன் சுந்தரவேல் (52). அரசுப் பேருந்து ஓட்டுநர். மது அருந்தும் பழக்கம் உள்ள இவர், செவ்வாய்க்கிழமை இரவு கே.கே.நகர் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு மினிவேனுக்கு அடியில் மது போதையில் படுத்து உறங்கினாராம்.
இந்நிலையில் இதனையறியாத அந்த வேனின் ஓட்டுநர், புதன்கிழமை காலை வேனை ஓட்டிச் சென்றுள்ளார். இதில் காருக்கு அடியில் இருந்த சுந்தரவேல் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அரியலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT