முகப்பு
அரியலூர்

ராஷ்ட்ரிய கேல் புரஸ்கார் விருதுபெற விண்ணப்பிக்கலாம்

ராஷ்ட்ரிய கேல் புரோட்சகான் புரஸ்கார் விருதுகள் பெற  ஏப். 15-க்குள்  விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும்

Updated On : 9 ஏப்ரல், 2018 at 8:35 AM
பகிர்:

ராஷ்ட்ரிய கேல் புரோட்சகான் புரஸ்கார் விருதுகள் பெற  ஏப். 15-க்குள்  விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்(பொ) ம.  ராமசுப்ரமணியராஜா எனத் தெரிவித்துள்ளார்.  
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார், அரசு மற்றும்  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ராஷ்ட்ரிய கேல் புரோட்சகான் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. 
கடந்த 3  ஆண்டுகளில், ஓராண்டுக்கு குறைந்தது 50 மாநில மற்றும் தேசியளவில் பதக்கங்கள் பெற்ற வீரர்களை உருவாக்கி இருக்க வேண்டும். விருதுக்கான விண்ணப்பம் மற்றும் விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளம் மூலம் பதிவிறக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116 ஏ.  ஈ.வே.ரா.பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை - 600 084 எனும் முகவரிக்கு ஏப். 15-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 74017 03499.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.