கிராம சபை கூட்டம்: ஆட்சியரிடம் மனு
மே 1 இல் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் குழந்தைகள் நலனுக்கான அம்சங்களை கூட்டப் பொருளாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
மே 1 இல் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் குழந்தைகள் நலனுக்கான அம்சங்களை கூட்டப் பொருளாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஆட்சியர் மு. விஜயலட்சுமியிடம் ரோஸ் அறக்கட்டளை இயக்குநர் ஜான். கே. திருநாவுக்கரசு அண்மையில் கோரிக்கை மனு அளித்தார்.
அவர அளித்த கோரிக்கை மனு: குழந்தைகளின் கல்வி, முன்பருவக் கல்வி, ஊட்டச்சத்து, சத்துணவு, நலவாழ்வு மற்றும் பாதுகாப்பு ஆகிய அம்சங்களின் இலக்கிற்கான குறியீட்டை அடைய நாம் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.