அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் சர்வதேச அறிவியல் நாள் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு அந்த கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் ஆலோசகர் தங்க. பிச்சையப்பா, முதல்வர் சேகர்,பேராசிரியர்கள் ராஜேஸ்வரி, பாலமுருகன், நிஷாந்தி, அபிநயா, ரஞ்சித் ஆகியோர் பேசுகையில், அமைதி மற்றும் வளர்ச்சியை நோக்கி உலகை அழைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சர்வதேச அறிவியல் நாள் கொண்டாடப்படுகிறது என்றனர். பேராசிரியர் தவசீலன் நன்றியுரை கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர் பழனியாண்டி ஆனந்தராஜ், சுஜிதா ஆகியோர் செய்திருந்தனர்.