அரியலூர்

கணவரை மிரட்ட  தீக்குளித்த பெண் காயம், குழந்தை சாவு

DIN

அரியலூரில்  மது அருந்திவிட்டு வரும் கணவரைப் பயமுறுத்தும் விதமாக தீ வைத்துக் கொண்ட பெண் காயமடைந்தார்,  குழந்தை இறந்தது. 
அரியலூர் எத்திராஜ் நகரை சேர்ந்தவர் கதிரவன். இவர் தினமும் மது குடித்துவிட்டு வந்ததால்  விரக்தி அடைந்த இவரது மனைவி மீனா (24), வெள்ளிக்கிழமை இரவு தனது ஒரு வயது மகன் சந்திப்ரோஷனை இடுப்பில் சுமந்தபடி உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொள்வதாக கணவரைப் பயமுறுத்தும் போது, எதிர்பாராத விதமாக தீப்பிடித்து இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற கதிரவனும் காயமடைந்தார்.
இதையடுத்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை சந்திப்ரோஷன் சனிக்கிழமை உயிரிழந்தார். அரியலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

கலுங்குவிளை கூட்டுறவு கடன் சங்கத்தில் துணைப் பதிவாளா் விசாரணை

SCROLL FOR NEXT