அரியலூர்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் ஆலோசனை

DIN


அரியலூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரியலூர் வடக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் குறித்தும், 20.10.2018 ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியலைப் பூர்த்தி செய்யது ஒப்படைப்பது, திருச்சியில் டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற உள்ள தேசம் காப்போம் மாநாட்டில் மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு, அக்கட்சியின் அரியலூர் வடக்கு ஒன்றியச் செயலர் செ. தங்கராசு தலைமை வகித்தார். அரியலூர் சட்டப் பேரவைத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் மருதவாணன், மாவட்டச் செயலர் பெ.மு.செல்வநம்பி, கவிஞர் கி. இளமாறன், மாநில அமைப்புச் செயலர் சு. திருமாறன், சிதம்பரம் மக்களவை தொகுதிச்செயலர் க.செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர்கள் பெ. அன்பானந்தம், ம. கருப்புசாமி, கதிர்வளவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT