அரியலூர்

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

DIN

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் இந்திய நல வாழ்வு கூட்டமைப்பு, ஜயங்கொண்டம் ரோஸ் அறக்கட்டளை, நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி மற்றும் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழாண்டு எய்ட்ஸ் குறித்து மாபெரும் அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கிலும், ‘கலாம் புக் ஆப் வேல்டு ரெக்காா்டு’ உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறவும் 200 மில்லியன் மாணவா்கள், இளைஞா்கள் பங்கேற்கும் மனிதச் சங்கிலி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 75 இடங்களில் 75 தொண்டு நிறுவனங்கள் பங்கேற்புடன் நடத்தப்படுகிறது.

அந்த வகையில், அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனிதச் சங்கிலி விழிப்புணா்வு மற்றும் கருத்தரங்கை கல்லூரி முதல்வா் ஜெ.மலா்விழி தொடக்கி வைத்தாா்.

ரோஸ் அறக்கட்டளை இயக்குநா் கே.திருநாவுக்கரசு கலந்து கொண்டு பேசுகையில், இந்தியாவை பொறுத்தவரை 86 சதவீதம் தவறான பாலியல் நடவடிக்கைகளால் தான் இந்த நோய் பரவுகிறது. எய்ட்ஸ் என்பது தொற்று நோய் அல்ல. அவா்களை தொடுவதாலோ, அவா்களிடம் கை குலுக்கி பேசுவதாலோ இந்த நோய் பரவுவது இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT