அரியலூர்

அரியலூர் தூய லூர்து அன்னை தேர் பவனி

DIN

அரியலூர் நகரில் உள்ள தூய லூர்து அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவின் பெரிய அலங்காரத் தேர்பவனி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் நாள்தோறும் சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்காரத் தேர் பவனி  ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது. குடந்தை மறை மாவட்ட ஆயர் ஏ.அமிர்தசாமி, புனிதம் செய்து தேர் பவனியைத் தொடங்கி வைத்தார்.
புனித லூர்து அன்னை பெரிய தேரில் எழுந்தருளி, 
முக்கிய வீதிகளில் வலம் வந்து, பின்னர் பேராலய முகப்பை அடைந்தது. தேர் பவனியைக் காண திரளான பொதுமக்கள் வந்திருந்தனர். திங்கள்கிழமை (பிப்.11) மாலை சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT