அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்ததில் 37 பேர் காயமடைந்தனர்.
அரியலூர் மாவட்டம், குந்தபுரத்தைச் சேர்ந்த 37 பேர், கீழப்பழுவூர் அருகிலுள்ள வைப்பம் கிராமத்தில் துக்க நிகழ்வுக்கு சுமை ஆட்டோவில் திங்கள்கிழமை சென்றனர்.
கீழப்பழுவூர் அருகே ஜயங்கொண்டம் சாலையில் எதிர்பாராத விதமாக சுமை ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவிலிருந்த 37 பேரும் காயமடைந்தனர்.
இவர்களில் தனசெல்வி(50), நீலாவதி(55), கமலா(59) உட்பட 6 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 31 பேர் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழப்பழுவூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.