அரியலூர்

சுமை ஆட்டோ கவிழ்ந்து 37 பேர் காயம்

DIN

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்ததில் 37 பேர் காயமடைந்தனர்.
அரியலூர் மாவட்டம், குந்தபுரத்தைச் சேர்ந்த 37 பேர், கீழப்பழுவூர் அருகிலுள்ள வைப்பம் கிராமத்தில் துக்க நிகழ்வுக்கு சுமை ஆட்டோவில் திங்கள்கிழமை சென்றனர்.
கீழப்பழுவூர் அருகே ஜயங்கொண்டம் சாலையில் எதிர்பாராத விதமாக  சுமை ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது.  இதில் ஆட்டோவிலிருந்த 37 பேரும் காயமடைந்தனர். 
இவர்களில் தனசெல்வி(50), நீலாவதி(55), கமலா(59) உட்பட 6 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மற்ற 31 பேர் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழப்பழுவூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT