அரியலூர் மாவட்டம், அழகியமணவாளன் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (30). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த ராதிகாவை (28) காதல் திருமணம் செய்தார்.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு வெளியே சென்றிருந்த சிலம்பரசன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் தூத்தூர் காவல் நிலையத்தில் புதன்கிழமை அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.