அரியலூர் மாவட்டம் ஆண்டிடம் காவல்துறையைக் கண்டித்து இளைஞர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
ஆண்டிமடம் அருகேயுள்ள காங்குழி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்திக்(25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் கார்த்திக்
அளித்த புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், மனம் வருந்திய கார்த்திக், ஆண்டிமடம் 4 சாலை சந்திப்பில் சனிக்கிழமை தனது உடலில் தீ வைத்துகொண்டார்.
இதையடுத்து அருகிலிருந்தோர் அவரை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி, இனிமேல் தகராறு செய்து கொள்ளக் கூடாது எனக் கூறி அனுப்பியதாகவும், அதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர் எனவும் ஆண்டிமடம் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.