அரியலூர்

மூதாட்டி காதை அறுத்து நகையைப் பறித்தவர் கைது

DIN

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மூதாட்டி காதை அறுத்து நகையைப் பறித்து, தலைமறைவாக இருந்த  இளைஞர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
ஜயங்கொண்டம் அருகிலுள்ள புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மனைவி முல்லையம்மாள்(65).இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கண்டியங்கொல்லையில் உள்ள தனது பேரன் வீட்டுக்குச் சென்றார்.
அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டில் தண்ணீர் கேட்பது போல் நடித்து,முல்லையம்மாளின் காதை அறுத்து தங்க கம்மல், சங்கிலி,மூக்குத்தி ஆகியவற்றை பறித்துச் சென்றார்.
இது குறித்து ஜயங்கொண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், நகையைப்பறித்துச் சென்றவர் விழுப்புரம் மாவட்டம்,கள்ளக்குறிச்சி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த ராக்கெட் ராஜா(எ)முத்துக்குமார் என்பது தெரியவந்தது.  
இதையடுத்து போலீஸார் அவரை திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT