அரியலூர்

தேள் கொட்டி  சிறுவன் சாவு

DIN

அரியலூர் மாவட்டம், வெங்கனூர் அருகே தேள் கொட்டி சிகிச்சை பெற்று வந்த சிறுவன் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கொரத்தாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசன் மகன் விஜயராகவன்(13). இவர், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை அங்குள்ள நீர் தேக்கத் தொட்டிக்கு குளிக்கச் சென்ற அவரை, தேள் கொட்டியது. 
இதையறிந்த அவரது பெற்றோர் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜயராகவன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். இதுகுறித்து வெங்கனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT