அரியலூர்

அனுமதியின்றி  மது விற்ற  இருவர் கைது

ஜயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மது விற்ற இருவரை தா. பழூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 

DIN

ஜயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மது விற்ற இருவரை தா. பழூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 
அனுமதியின்றி மது விற்கப்படுவதாக தகவல் அறிந்த தா. பழூர் காவல் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட போலீஸார் செவ்வாய்க்கிழமை காலை சம்பவ இடத்துக்குச் சென்றுபார்த்ததில்,  தென்கச்சி பெருமாள்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் நெடுஞ்செழியன்(58), அமிர்தலிங்கம் மகன் புஷ்பராஜ்(63) ஆகியோர் தங்களது வீட்டிற்கு பின்புறம் மதுபாட்டில்களை மறைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT