அரியலூர் மாவட்டம் வெங்கனூர் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிராஜ் மகன் ஜோன்ஸ் (18). தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்த இவர், சனிக்கிழம் இரவு திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற நந்தியெம்பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சியை காண்பதற்காக புள்ளபாடியில் இருந்து இலந்தைகூடம் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது இலந்தைகூடம் பிரிவு சாலை அருகே இவரது வாகனமும் எதிரே வந்த மற்றொரு வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ஜோன்ஸ், திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். வெங்கனூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.