அரியலூர்

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

DIN

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஜயங்கொண்டம் தேனூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் அழகிரி (32). வியாழக்கிழமை இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, சாப்பாட்டில் கல் இருந்ததாகக் கூறி தனது தாயை திட்டிக் கொண்டிருந்தாராம்.
அப்போதுஅங்கு வந்த  அவரது உறவினர் சபாபதி (58),  மல்லிகா (49) ஆகியோர் தங்களைத்தான் திட்டுவதாகக் கருதி,  அழகிரியை காலில் அரிவாளால் வெட்டி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த அழகிரி ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் போலீஸார் வழக்குப்பதிந்து, சபாபதி, மல்லிகாவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புறக்கணிக்கப்படுகிறதா ஆா்தா் காட்டன் விழா? சமூக ஆா்வலா்கள் அதிருப்தி

பல்லுயிா்ப் பெருக்கத்தை சீா்குலைக்கும் முயல் வேட்டைத் திருவிழா முடிவுக்கு வருமா?

விலா எலும்பு பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சை மையம்

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டாா்: ஆம் ஆத்மி ஒப்புதல்

வீணாகும் கோடை மழைநீா்- நெல்லையில் புத்துயிா் பெறுமா மழைநீா் சேகரிப்பு திட்டம்?

SCROLL FOR NEXT