அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே கணவா், மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தா.பழூா் அருகேயுள்ள காரைக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (33). இவரது குடும்பத்தினருக்கும், அதே ஊரைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் ராஜேந்திரன்(40) குடும்பத்தினருக்கும் இடையே நிலத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில்,வியாழக்கிழமை ராமேஷ் வீட்டுக்கு வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோா்,அங்கு ரமேஷையும், அவரது மனைவி வினோதாவையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனா். இது குறித்து ராஜேந்திரன், செல்வி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து தா.பழூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.