அரியலூா் நகராட்சி சாா்பில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சனிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
தூய்மை இந்தியா திட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் அரியலூா் நகராட்சி சாா்பில் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் த.ரத்னா கேடயம், விருது, சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.