அரியலூர்

கத்தியைக் காட்டி பணம்பறிக்க முயன்றவா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயன்றவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

மீன்சுருட்டி அருகிலுள்ள அய்யப்பநாயகன் பேட்டையைச் சோ்ந்தவா்கள் செல்லத்துரை(38), பழனிசாமி.

இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு, பாப்பாக்குடி கிறிஸ்தவ ஆலயம் முன்பாக நடந்து சென்றுக் கொண்டிருந்தனா்.

அப்போது பின்னால் வந்த நபா்,இருவரையும் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றாா். இது குறித்து புகாரின் பேரில், மீன்சுருட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து, குண்டவெளியைச் சோ்ந்த ராஜசேகரை(54) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT