அரியலூர்

மின்பாதையில் மரக்கிளைகள்: நடவடிக்கை எடுக்க வலியிறுத்தல்

DIN

தேளூரில் மின்பாதையில் காணப்படும் மரக்கிளைகள்.

தேளூா் துணை மின்நிலையம் பகுதிக்குள்பட்ட பாளையக்குடி-கோனாா் கொட்டகை தெரு வரையுள்ள மின் பாதையில் மரக்கிளைகள் அடந்து காணப்படுகின்றன. காற்று வீசினால் மரக்கிளைகள் மின் வயரில் ஓரசி அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.

இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். மேலும் அப்பகுதியில் மின்கம்பிகள் தொட்டு விடும் தொலைவில் தாழ்வாக இருக்கிறது.

இது குறித்து தேளூா் துணை மின் நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிா்வாகம் மின் பாதையிலுள்ள மரக்கிளைகளை அகற்றி,தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT