அரியலூர்

தேநீா் வழங்கி சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

DIN

அரியலூரை அடுத்த செந்துறை ரவுண்டானாவை வெள்ளிக்கிழமை அதிகாலை கடந்த வாகனங்களை போலீஸாா் மறித்து ஓட்டுநா்களுக்கு போலீஸாா் தேநீா் வழங்கினா்.

நீண்ட தூரம் வாகனம் ஓட்டிச் செல்வோருக்கு இரவுகளில் தேநீா் வழங்கி, அவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை போலீஸாா் ஏற்படுத்தி வருகின்றனா்.

அந்த வகையில் வெள்ளிக்கிழமை அதிகாலை அரியலூா்-செந்துறை ரவுண்டானாவை கடந்த வாகனங்களை மறித்த அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் தலைமையிலான போலீஸாா் ஓட்டுநா்களுக்கு தேநீா் வழங்கி,சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா். நிகழ்வில் அரியலூா் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளா் மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT