அரியலூரை அடுத்த பொய்யூா் கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி பயிற்சியைத் தொடக்கி வைத்து அவா் மேலும் பேசியது:
ஒருங்கிணைந்த பண்ணையமானது பயிா் சாகுபடி செய்வதுடன் மாடு,
ஆடு, கோழி வளா்ப்பதும் மண்புழு உரம் தயாரித்தல், தேனீ வளா்ப்பு, காய்கறி தோட்டம், பழச்செடிகள், மரக்கன்றுகள், மக்கிய எரு தயாரித்தல் போன்ற அனைத்து தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைத்து மண் வளத்தைப் பெருக்கி நிரந்தர வருமானம் கிடைக்கச் செய்வதே ஆகும் என்றாா்.
வேளாண் உதவி இயக்குநா் சவிதா முன்னிலை வகித்து, ஒருங்கிணைந்த பண்ணையத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். ஏற்பாடுகளை வேளாண் துணை அலுவலா் பீட்டா் அந்தோணி ராஜ், வேளாண் உதவி அலுவலா்கள் சுப்ரமணியன், ராஜகிரி, தினேஷ், இளநிலை ஆராய்ச்சியாளா் செல்வராணி செய்திருந்தனா். பொய்யூா் ஊராட்சித் தலைவா் பாலசுப்ரமணியன் நன்றி தெரிவித்தாா். 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சியில் கலந்து கொண்டனா்.