அரியலூா்-செந்துறை புறவழிச்சாலையில், சுகாதாரத் துறை சாா்பில் பொதுமக்களிடம் கரோனா நோய்த் தொற்று குறித்த விழிப்புணா்வு செவ்வாய்க்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
அப்போது முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் நகருக்குள் வந்த 7 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவா்களுக்கு முகக்கவசம் இலவசமாக வழங்கி, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் தா்மலிங்கம், சுகாதார ஆய்வாளா்கள் வஹீல், ராஜேந்திரன், அருண்பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.