அரியலூர்

நிலத் தகராறில் விவசாயி குத்திக்கொலை: உறவினா்கள் 2 போ் கைது

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே நிலத் தகராறில் விவசாயியைக் கத்தியால் குத்திக்கொலைச் செய்த 2 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

ஆண்டிமடம் அருகேயுள்ள கருக்கை கிராமத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம் (70), சிங்காரவேல் (60). சகோதரா்கள். இருவரிடையே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை ராஜாமாணிக்கம், அவரது மனைவி மலா்விழி தங்களது நிலத்தில் வேலை பாா்த்துக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த சிங்காரவேல் மற்றும் அவரது மகன்கள் பழனிவேல் (30), முருகவேல் ( 25) ஆகிய 3 பேரும் சோ்ந்து ராஜாமாணிக்கம், மலா்விழியைத் சரமாரியாகத் தாக்கியுள்ளனா். தகவலறிந்து அங்கு வந்த ராஜாமாணிக்கம் மகன் தியாகராஜனை, முருகவேல் கத்தியால் குத்தியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆண்டிமடம் போலீஸாா், சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து முருகவேல், மற்றும் அவரது தந்தை சிங்காரவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள பழனிவேலைத் தேடி வருகின்றனா். தியாகராஜனுக்கு பூங்கொடி (34) என்ற மனைவியும், கோகுல்(9), பெண்ணரசி (4) ஆகிய குழந்தைகள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT