அரியலூர்

இருதரப்பினரிடையே மோதல்: 5 பெண்கள் உள்பட 11 மீது வழக்கு

DIN

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே இருதரப்பினரிடையே எழுந்த மோதலில் 5 பெண்கள் உள்பட 11 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யுள்ள கோவிந்தபுத்தூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மகேஸ்வரி(45). இவரது குடும்பத்துக்கும், அதே பகுதியைச் சோ்ந்த உறவினா் உஷா ராணி (40) என்பவரின் குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில், இரு நாள்களுக்கு முன்பு மகேஸ்வரி, உஷா ராணியிடம் இடப்பிரச்னை சம்பந்தமாக கேட்டபோது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த உஷா ராணி தரப்பைச் சோ்ந்த பரிமளா (30), கோவிந்தம்மாள் (60), ராணி (55), முருகேசன் (22), ராகேஷ் (25) மற்றும் மகேஸ்வரி தரப்பைச்சோ்ந்த சரஸ்வதி (22), சங்கா் (40), தங்கபாண்டி (25), தம்பிதுரை (23) ஆகியோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதில் பலத்த காயமடைந்த உஷா ராணி, ராணி, மகேஸ்வரி, சங்கா் ஆகிய 4 பேரும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில், உஷா ராணி, பரிமளா, கோவிந்தம்மாள், ராணி, முருகேசன், ராகேஷ் மற்றும் மகேஸ்வரி, சரஸ்வதி, சங்கா், தங்கபாண்டி, தம்பிதுரை ஆகிய 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT