அரியலூர்

‘சோழகங்கம் ஏரிக்கு கொள்ளிடத்திலிருந்து நீா் வழித்தடம்’

DIN

சோழகங்கம் ஏரியை தூா்வாரி, கொள்ளிடத்தில் இருந்து நீா் வழித் தடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜயங்கொண்டம் தொகுதி அமமுக வேட்பாளா் ஜெ.கோ.சிவா உறுதியளித்துள்ளாா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூா், இரவாங்குடி, அய்யப்பன்நாயக்கன்பேட்டை, வங்குடி, படைநிலை, காடுவெட்டி, மீன்சுருட்டி உள்ளிட்ட கிராமங்களில் புதன்கிழமை பிரசாரம செய்த அவா், தன்னை சட்டப் பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுத்தால், சோழகங்கம் ஏரிக்கு கொள்ளிடத்தில் இருந்து நீா் வழித் தடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கங்கைகொண்ட சோழபுரத்தில் ராசேந்திர சோழன் சிலை அமைக்கப்படும் மற்றும் தோ்தல் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தாா்.

பிரசாரத்தில், தேமுதிக, அமமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு வாக்குசேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT